Posts

Showing posts from April, 2017

புராண பேத தாத்பர்ய விளக்கம்

Image
  வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம்  கேசவாத் பரம். மகாபுராணங்கள் பதினெட்டு. அவை ஸாத்வீகம், ராஜஸம், தாமஸம் எனும் மூன்று வகைப்படுகிறது. அவ்ஸாத்வீக புராணங்களோடு விரோதிக்கும் புராணங்கள் தள்ளதக்கவை என்பதே தாத்பர்யம். அவ்ஸாத்வீக புராணங்களுணர்த்தும் பரதெய்வம் நாராயணன் ஒருவனே என்பது ப்ரத்யக்ஷம். அதற்கு அவைதீகமாய் சில சைவர்களின் பாஷாண்டவாதத்தை பரப்பி தம்புராணங்களை சிறப்பிக்க முயல்கின்றனர். அவை பகற்கனவே என்பதையும்   ஸாத்வீகதேவதை நாராயணன் ஒருவனே என்பதையும் அவர் மஹிமை கூறும் பகுதிகளையே அறிவுடையோர் அனுஸரித்து மற்றையவற்றை புறந்தள்ளளல் வேண்டும்  என்பதையும் நிலைநாட்டும் நீண்ட பதிவே இது. [குறிப்பு- * இப்பதில் சமஸ்கிருத ஸ்லோகங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பின் பெரியோர் திருத்திகொள்க.  * சில புராண வசனங்கள் நீண்டதாக இருப்பதால் அவை பட வடிவில் தரப்படுகிறது.  *இக்கட்டுரைக்கு கையாண்ட நூல்கள் *வைஷ்ணவ ஸுதர்சனம் *விஷ்ணுசித்த விஜயம் *பத்ம புராணம்-பூனாஆநந்தாஸ்ரமபதிப்பு * 108 உபநிஷத் ஸாரம்-ராமகிருஷ்ண மடம் *கம்பராமாயணம் *ஆழ்வார் பாசுரங்கள் *பரஹ்பிரம்ம விவேகம் *History of civilization in Anc

வைஷ்ணவ ஆகார லக்ஷனம்

Image
    வைஷ்ணவர்கள் சதாசாபரர்களாக ஒழுக வேண்டியஆசாரம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய  ஞானேந்திரியங்கள் ஐந்தும் வாக், பாத, பாணி, பாயு , உபஸ்தம் ஆகிய காமேந்திரியங்கள் ஐந்தும் மனம் ஒன்றுமாகிற பதினொரு இந்திரியங்களின் சுத்தியையும் சரீர, ஆத்ம சுத்தியையும் அனுஷ்டித்தலேயாம். இவ்வனுஷ்டானம் முற்றிலும் சீர்குழைந்து கிடப்பதுஆகாரத்தில்தான்.  வைஷ்ணவ அந்தணர்களில் கூட இன்று அதை கடைபிடிக்க தவறுகின்றனர். பகவானுக்கு படைக்காமல் உண்ணுகிற உணவு மலத்திற்கு சமம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. இன்று சந்தையில் விற்கும் கண்ட கண்ட பண்டங்களை புசிக்கின்றனர். அவை அசைவ பதார்தங்கள் என அறிந்தபோதிலும் அலட்சியம். அதிலும் இன்று பிறந்தநாள் என்றால் கேக் வெட்டியும் உண்கின்றனர். இவையெல்லாவற்றையும் செய்துகொண்டு வைஷ்ணவன் என கூறிக்கொள்வது அபசாரத்திலும் அபசாரம். ஆகவே ஆகாரநியதிகளை வலியுறுத்தவே இப்பதிவாம்.  பதார்தங்களின் ஒவ்வொரு பதார்த்தமும் ஒவ்வொரு குணமுண்டு என வைத்ய சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு சாத்வீக, ராஜஸ, தாமஸமெனும் மூவகை உணவுகளுள் தாமஸஉணவை தவிர்த்து ராஜஸஉணவை சுருக்கி, சாத்வீக உணவை வைஷ்ணவம் புசிக்க வேண்டும்

ஊர்த்தவபுண்டர மஹிமை

Image
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் வைதீகர்கள் அனைவரும் தங்கள் நெற்றி முதலான பாகங்களில் தரிக்கும் சின்னமே புண்டரம் எனப்படும். இவை பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக மேலே நோக்கி நெற்றிக்கு நிலைகுத்தாக இடப்படும் ஊர்தவபுண்டரமும் கிடையாக இடப்படும் திரியகபுண்டரம் என்பவையே இரண்டு வகைப்பட்ட அதிகாரிகளுக்கும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுருக்கிறது.                  மனிதன் பகுத்தறிவு உள்ளவன். உயர்கதிக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவன். அதனாலேயே ஸர்வேஷ்வரன் அவனை உயரவளரும்படி படைத்துள்ளான். ஆனாலும் அநாதிவாஸனையால் பல மனிதர்கள் உயர்கதிக்கு செல்ல வேண்டுமெனும் நினைவே இல்லாமிலிருக்கிறது. இப்படிபட்டவர்களின் தரத்திற்கேற்ப இம்மை பலனைகொடுக்க பல தேவர்களை படைத்தார் பரந்தாமன். மனிதனாயிருந்தும் திரியக்குகளைப்போல் (ஜந்து) திர்யகதிகளிலேயே உழலும் இவர்களுக்கு திரியகபுண்டரத்தை சாஸ்திரங்களில் சொல்லிவைத்திருக்கிறான். உயர்கதிக்கு செல்லவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊர்த்தவபுண்டரத்தை விதித்திருக்கிறான் வாஸுதேவன்.                    இப்படி யாம்எழுதியிருப்பதால் திரிய