கிறீஸ்தவ புரட்டு தும்சகட்கம்

தாயப்பன், சாதுசெல்லப்பா என்ற சில கிறுக்கு கிறீஸ்தவர்கள் நமது புனிதமான வேதங்களில் இயேசுபற்றி இருப்பதாகவும், இயேசுவையே வணங்கவேண்டும் என்றெல்லாம் பேசி இந்துக்களை குழப்பும் நோக்கில் உரையாடல்கள், குறும்படம் எடுத்து கிறீஸ்தவத்தை பரப்ப நினைக்கும் குறுக்குவேலையில் ஈடுபட்டும் குள்ளநரிகள் ஆவர்.

இதை நம்பிய சில கிறீஸ்தவ ஊழியர்கள் இதை நம்மிடம் பரப்பி அவர்களின் நோக்கிற்கு எம்மை பலியாக்குகின்றனர். எனவே இது பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இருந்தால்தான் இப்புல்லுருவிகளிற்கு தக்க பதிலடிகள் கொடுக்கலாம். அதன் பொருட்டு 2012-10-6 அன்று தனிமனித ராணுவம்,நாராயண அஸ்திரம் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணமாச்சார்யரால் வெளியிடப்பட்ட "பாஞ்சஜன்யம்" பத்ரிகையில் எழுந்த மறுப்புவிஷயங்களை இங்கே பதிவிடுகிறேன்.

 வேதத்தில் கூறப்பட்ட "பிரஜாபதி"தான் இயேசு என்பதே இவர்களின் அடிப்படை வாதம். இதற்கென தனி அமைப்பே செயல்படுகிறது. "பிரஜாபதி மதம்" என்ற பெயரிலான கிறீஸ்தவகுழு தேவிஸ்ட், முக்திஸ்ட், ஆகநிஸ்ட் என்ற மூன்று பிரிவில் கிறீஸ்தவ தேவாலயங்களின் உதவியில் இந்துமதத்தவர்களை மதம் மாற்றும் கும்பல்.

 "பிராஜாபதி மதம்"என்ற பெயரில் தாங்களாகவே ஒன்றை கற்பித்து திரியும்
சில கிறீஸ்தவர்களே இவ்வாறு வேதத்தில் சில மேற்கோள்களை கையாண்ட தமது கருத்தை நிலைநாட்ட முயலுகின்றனர். தம் கொள்கைகேற்றவாரு " ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ"போன்ற வேதமந்திரங்களை கற்பித்து பிரசாரம் செய்கின்றனர். இம்மாதிரி மந்திரம் வேதத்தில் எங்குமே இல்லை.

 ஐதரேய ப்ராஹ்மணத்தில் பிராஜபதியை தேவர்கள் பலியிட்ட விஷயம் வருகிறது. ப்ரஜாபதி தன் மகளையே மனைவியாக்க துணிந்தான். இதை தேவர்கள் தடுத்த போது அவன் அவற்றை புறக்கணித்தான். எனவே அவனுக்கு மரணத்தை வழங்க ஒரு ருத்ரனை படைத்தார்கள். அவன் ப்ரஜாபதியை அழித்தான்.

 இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் இயேசுக்கு மகள், மனைவி உண்டா? மகளை அவர் புணர நினைத்தாரா? இப்படி சரித்திரத்தில் உள்ளதா என்று வினாவினால் ப்ராஜாபதிகள் பலர். நாம் புருஷ ப்ரஜாபதியையே இயேசு என்கிறோம் என்று சாதிப்பர்.

 அதே ப்ராஹ்மணத்தில் அடுத்த சில மந்திரங்களில் புருஷப்ராஜாபதி சில மனிதனை படைக்க பெண்ணிடத்தில் ரேதஸை விட அதன் அளவு அதிகமாக இருந்ததால் அப்பெண்ணால் அதை ஏற்கமுடியவில்லை. அது ஓடையாக விழுந்து அதிலிருந்து மனிதன் உண்டானான் என்கிறது.

   இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் எப்பெண்ணிடம் வீர்யத்தை விட்டார்? எந்த மனிதன் அவ்வீர்யத்தில் உண்டானான்? இவையெல்லாம் நடந்தாலன்றோ யேசுகிறீஸ்து ப்ரஜாபதியாவார்.

   தங்கள் கடவுளான புருஷப்ரஜாபதி என்றதனால்தானோ புருஷ ஸூக்தத்தை மேற்கோள் காட்டுகின்றனர்! புருஷ ஸூக்தத்தில் வரும் ஆதிபுருஷனை கொண்ட வேள்வியில் பலியிடப்படும் யாகப்பசுக்களை ப்ரஜாபதியான இயேசு என கதை கட்டுகின்றனர்

  வேள்விகளில் யாகப்பசு யூகஸ்தம்பத்தில் கட்டப்பட்டு தர்ப்பை புல்லான கயிற்றால் கட்டப்பட்டு மூச்சு நிறுத்தபடுகின்றன. இவ்யூகஸ்தம்பத்தை சிலுவைஎன்றுவாதாடகின்றனர்.சாதாரணமாக ஒரு புலால் வியாபாரி கூட குறிப்பிட்ட விலங்கை கட்டி வைத்திருப்பான். அதனால் விலங்கு கட்டுமிடமெல்லாம் சிலுவையாகுமா? பொய்சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?

 அடுத்ததாக யாகப்பசுவினை கட்டும் தர்ப்பை புல்லை முள்முடி என்கின்றனர். யாகப்பசு தர்ப்பைபுல்லால் கட்டப்பட்டு இறக்கின்றது என்றல்லவா ப்ரஹாமானங்கள் கூறுகின்றன. ஆனால் இயேசுவோ ஆணியால் அறையப்பட்டதாக அல்லவா கூறப்படுகின்றது. இந்த அரைவேகாட்டு மண்டுகள் யாகப்பசுவையும், இயேசுகிறீஸ்துவையும் ஒன்று என்று கூறுவதை சில பைத்தியங்கள் காது கொடுத்து கேட்பது கொடுமையிலும் கொடுமை

 ஆகவே இயேசு கிறீஸ்து வேதத்தில் பரஜாபதி கூறப்படுகின்றார் என்ற அபத்த கருத்துக்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றிலும் இவர்கள் கூறும் எந்த விஷயமும் இல்லை. அறைகுறை மக்களை ஏமாற்றி மதம்மாற்றும் ஈன யுக்திதான் இது. எனவே இது போன்ற ஈனபுரட்டு வலையில் மக்கள் சிக்கிக்கொள்ள கூடாது.

குறிப்பு-முஹமதியராயனும்,கிறீஸ்தவராயினும் எமது வேத, புராணத்தில் பிச்சை எடுத்து மதம்வளர்ப்பதையே நோக்காக கொண்டுள்ளனர். இத்தாள் எம் வேதத்திற்கு நிகராக ஏதுமில்லை என்பதையும் அறிக.


  

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்