வேத உபனிஷதுக்களில் விஷ்ணு பரத்வம்

   வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்


         அந்தர்யாமி நிர்ணயம் 


அந்தர்யாமியத்வம் இருவகைபடும். ஒன்று தன் ஸ்வரூபத்தாலேயே ஸர்வவஸ்துக்களை வியாபித்திருப்பது.
இதை முந்தைய உபனிஷத் வாக்யங்களில் பார்த்தோம். மற்றொன்று உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்கு அவருடைய ஹ்ருதய கமலத்தில் திவ்யமங்கள விக்ரஹத்துடன் கூடியவனாய் எருந்தருளியிருப்பது இன்னொன்று.

        "இந்தீவரஸ்யாம:ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித"

        முதலான ரிஷிவாக்யங்களும்
         "வெள்ளைச்சுரி சங்கொடொழியேந்தி தாமரைக்கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக்கடாக்கின்றவரை காணீர்"

    முதலான ஆழ்வார் பாசுரங்களும் பகவான் திருமேனியுடனும் சங்குசக்ராதிகளுடனும் எழுந்தருளியிருக்கிறான் என்பதற்கு ப்ரமாணம். பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி , அர்ச்சை எனும் ஐந்துநிலைகளில் நான்காம் நிலையே அந்தர்யாமி நிலை இதுவே.

   நாராயண வல்லியில் பதினொராவது அநுவாகமான நாராயண ஸூக்தத்தில் "விச்வாத்மாநாம் பாராயணம் நாராயணம் என்றும் " ஆத்மா நாராயண பர"என்றும்

   "யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே
ஸ்ரூயதேபி வா| அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண:ஸ்தித||

   இவ்வுலகில் காண்பனவாகவும் கேட்பனவாகவுமுள்ள எல்லாவற்றையும் உள்ளும் புறமும் வியாபித்து நிற்கிறான் நாராயணன்

  என்றும் ஸ்வரூபத்தாலே எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் அந்தர்யாமி  நிலையைச் சொல்லி " பத்மகோஸப்ரதீகாஸம் ஹ்ருதயம்" என்று தொடங்கி

  "தஸ்ய மத்யே வஹ்நி ஸிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித:
    நீல தோயத மத்யஸ்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா
    நீவார ஸூகவத் தந்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா.தஸ்யா ஸிகாயா
மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம ஸ ஸிவஸ் ஸேந்த்ரஸ்  ஸோக்ஷர: பரம: ஸ்வராட்"

  அந்த ஹ்ருதயத்தின் நடுவில் மெல்லியதாயும் மேல்நோக்கியதாயும் அக்னி அமைந்துள்ளது. கருமேகத்தின் நடுவிலிருந்து ஒளி வீசுகின்ற மின்னல் கொடி போலவும், நெல்லின் முளைபோல் மெல்லியதாகவும், பொன்னிறமாகவும், அணுவைப் போல் நுண்ணியதாகவும் அது  பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
அவனே பிரம்மனுக்கு அந்தர்யாமி:சிவனுக்கு அந்தர்யாமி:இந்திரனுக்கு அந்தர்யாமி:கர்மத்திற்கு வசப்படாதவனாகவும் மேலானவனுமானமுக்தாத்மாவிற்கும்  அந்தர்யாமி அவனே.

    என்பது வரையில் பிரம்மஹருத்ரேந்தர்களுக்கு ஸ்வரூபத்தாலும்,  விக்ரஹத்தாலும் வியாபித்து அந்தர்யாமியாய் விளங்குகின்றான் என்று நிர்ணயிக்கபட்டதாயிற்று.

நாராயணனே ஸர்வ காரணன் என கோஷிக்கும் வாக்யம் பல. அவற்றுள் ஸர்வ அந்தர்யாமியும் என முடிவு கட்டிருப்பதை இங்கு பார்ப்போம்

அந்த:ஶரீரே நிஹிதோ குஹாயாமஜ ஏகோ நித்யமஸ்ய ப்ருʼதிவீ ஶரீரம் ய: ப்ருʼதிவீமந்தரே ஸஞ்சரன்யம் ப்ருʼதிவீ ந வேத। யஸ்யாப:ஶரீரம் யோ அபோऽந்தரே ஸஞ்சரன்யமாபோ ந விது:।
யஸ்ய தேஜ: ஶரீரம் யஸ்தேஜோऽந்தரே ஸஞ்சரன்யம் தேஜோ ந வேத। யஸ்ய வாயு: ஶரீரம் யோ வாயுமந்தரே ஸஞ்சரன்யம் வாயுர்ன வேத।
 யஸ்யாகாஶ: ஶரீரம் ய ஆகாஶமந்தரே ஸஞ்சரன்யமாகாஶோ ந வேத। யஸ்ய மன: ஶரீரம் யோ மனோऽந்தரே ஸஞ்சரன்யம் மனோ ந வேத । யஸ்ய புத்தி: ஶரீரம் யோ புத்தி மந்தரே ஸஞ்சரன்யம் புத்திர்ன வேத। யஸ்யாஹங்கார: ஶரீரம் யோऽஹங்காரமந்தரே ஸஞ்சரன்யமஹங்காரோ ந வேத। யஸ்ய சித்தம் ஶரீரம் யஶ்சித்தமந்தரே ஸஞ்சரன்யம் சித்தம் ந வேத । யஸ்யாவ்யக்தம் ஶரீரம் யோऽவ்யக்தமந்தரே ஸஞ்சரன்யமவ்யக்தம் ந வேத। யஸ்யாக்ஷரம் ஶரீரம் யோऽக்ஷரமந்தரே ஸஞ்சரன்யங்க்ஷரம் ந வேத । யஸ்ய ம்ருʼயு: ஶரீரம் யோ ம்ருʼத்யுமந்தரே ஸஞ்சரன்யம் ம்ருʼத்யுர்ன வேத । ஸ ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:

சுக்ல யஜூர் வேதம்-அத்யாத்மோபனிஷத்-1.

சரீரத்தில் ஹ்ருதயகுகையில் பிறப்பற்றவனாய் ஒப்பற்றவனாய் நித்யனாய் இருக்கும் எவனொருவனுக்கு பூமியானது சரீரமாய் இருக்கிறதோ எவனொருவன் பூமியில் சஞ்ஞரிக்கிறானோ எவனை பூமியானது அறியவில்லையோ எவனுக்கு ஜலம் சரீரமோ எவன் ஜலத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை ஜலம் அறியாதோ எவனுக்கு அக்னி சரீரமோ எவன் அக்னியில் சஞ்ஞரிக்கிறானோ எவனை அக்னி அறியவில்லையோ எவனுக்கு வாயு சரீரமோ எவன் வாயுவில் சஞ்ஞரிக்கிறானோ எவனை வாயு அறியாதோ எவனுக்கு ஆகாசம் சரீரமோ
எவன் ஆகாசத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை ஆகாசம் அறியவில்லையோ எவனுக்கு மனம் சரீரமோ
எவன் மனதில் சஞ்ஞரிக்கிறானோ எவனை மனம் அறியவில்லையோ எவனுக்கு புத்தி சரீரமோ
எவன் புத்தியில் சஞ்ஞரிக்கிறானோ எவனை புத்தி அறியவில்லையோ
எவனுக்கு அஹங்காரம் சரீரமோ
எவன் அஹங்காரத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை அஹங்காரம் அறியவில்லையோ எவனுக்கு சித்தம் சரீரமோ
எவன் சித்தத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை சித்தம் அறியவில்லையோ எவனுக்கு அவ்யக்தம் சரீரமோ
எவன் அவ்யக்தத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை அவ்யக்தம் அறியவில்லையோ எவனுக்கு அக்ஷரம் சரீரமோ
எவன் அக்ஷரத்தில் சஞ்ஞரிக்கிறானோ எவனை அக்ஷரம் அறியவில்லையோ எவனுக்கு ம்ருத்யு சரீரமோ
எவன் ம்ருத்யுவில் சஞ்ஞரிக்கிறானோ எவனை ம்ருத்யு அறியவில்லையோ அவனே எல்லா ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாய் பாபமற்றவனாய் பரமபதத்திலே எழுந்தருளியிருப்பவனாய்
ஒப்பற்றவனான இந்நாராயணன்


எல்லாப்பொருள்களிலும் அந்தர்மியாயிருப்பதால் நாராயணனே எல்லாமாய் இருக்கிறான் என அத்யாத்மோபனிஷத் முடிவு செய்ததை பார்த்தோம். இவ்வுபனிஷத்தில் பிரம்ம, சிவனுக்கு நாராயணனே காரணபுருஷன் என்பதை

    நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

    ''நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.'''

      என நிர்ணயித்துள்ளது. நாராயணனே ப்ரஹ்ம ருத்ரருக்கு அந்தர்மியாய் இருப்பதால் அவர்களாகவும் ஆனவன் என்பதை இரண்டாம் வேதமான யஜூர்வேதத்தின் தலையான அர்தம் உத்கோஷிக்கிறது.


      அத நித்யோ நாராயண: । ப்ரஹ்மா நாராயண: । ஶிவஶ்ச நாராயண: । ஶக்ரஶ்ச நாராயண: । த்யாவாப்ருʼதிவ்யௌ ச நாராயண: । காலஶ்ச நாராயண: । திஶஶ்ச நாராயண: । ஊர்த்வஶ்ச நாராயண: । அதஶ்ச நாராயண: । அந்தர்பஹிஶ்ச நாராயண: । நாராயண ஏவேதஸர்வம் । யத்பூதம் யச்ச பவ்யம் । நிஷ்கலோ நிரஞ்ஜனோ நிர்விகல்போ நிராக்யாத: ஶுத்தோ தேவ ஏகோ நாராயண: । ந த்விதீயோऽஸ்தி கஶ்சித் । ய ஏவம் வேத । ஸ விஷ்ணுரேவ பவதி ஸ விஷ்ணுரேவ பவதி ॥

        நித்யனாயிருப்பவன் நாராயணனே.சிவனும் நாராயணனே, இந்திரனனும் நாராயணனே, காலமும் நாராயணனே  திக்குகளும் நாராயணனே விதிக்குகளும் நாராயணனே உள்ளும் புறமும் நாராயணனே சென்றவையும் இருப்பவையும் வருபவையும் ஆகிய எல்லாம் நாராயணனே  களங்கமற்றவனும் தோஷமற்றவனும் மனோவாக்குகளுக்கு எட்டாதவனும் சுத்தமான தேவன் நாராயணன் ஒருவனே இரண்டாவன் எவனுமில்லை. எவன் இப்படி அறிகிறானோ அவன் விஷ்ணுவைப்போல ஆகிறான். என யஜூர்வேதம் உரைக்கிறது

 .  "அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே| ஸதை கரூபரூபாய
 விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||

    ப்ரக்ருதினுடையது போல் ஸ்வரூபவிகாரம் இல்லாதவனாகவும் ஜீவனுடையது போலவும் அசுத்தியில்லாதவனாகவும் நித்யனாகவும் பரமாத்மாவாகவும் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையவனாகவும் எல்லாரையும் ஜயித்திருப்பவனாயுள்ள விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

    என பராசரமஹரிஷி இவ்வாக்யத்திற்கு உபப்ருஹனம் செய்தருளினார். இவ்வுபனிஷத்திலிருந்து நிர்ணயம் செய்யப்படுவது யாதெனில் நாராயணன் ஒருவரே ஸர்வகாரனபுருஷனாகவும் சிவ பிரம்மனுக்கு அந்தர்மியாய் இருந்து இயக்குகிறார்(அவர்களுக்கு அந்தர்மியாய் இருக்கிறாரே தவிர ஐக்கியமாகவில்லை) என்பதேயாகும்.


  அம்ருதபிந்தூபனிஷத்தின் ப்ரஹ்மநிர்ணயம்


      கிருஷ்ண யஜூர்வேதத்தில் அமைந்த  அம்ருதபிந்தூபனிஷத வாக்யங்கள் பல ஆச்சார்யர்களால் கையாளப்பட்டுள்ளன.  திருவாய் மொழி ஈட்டில் "ப்ரஹ்மவிதூபனிஷத்து" என்று தொடங்கி ஒரு வாக்யம் எடுத்தாளப்பட்டுள்ளது. "ததஸம்ஹயம் வாஸூதேவ இதி என முடிகிறது. ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமது தத்வமுக்தாகலாபத்தில் நாயகஸரத்தில்
ஒரு ஸ்லோகத்தில் "ப்ரஹ்மபிந்துப்ரப்ருதிகமபி நஸ் தத்பரம் தத்பரத்வே" என்று அருளியுள்ளார். இதற்கு பரஹ்மபிந்தூபனிஷத்தும் பகவத் பரத்வநிர்ணயத்துக்கு நமக்கு முக்கிய ப்ரமாணங்கள் என்பதே பொருள்.

       'அத ஏவ சோபாமா ஸூர்யகாதிவத்' என்ற ப்ரஹ்மஸூத்ரத்தின் பாஷ்யத்தில் இவ்வுபனிஷத்திலுள்ள 'ஏக ஏவ வது' என்று தொடங்கும் மந்திரத்தை ஆதிசங்கரர் எடுத்துள்ளார். இவ்வாறு பலரால் கையாளப்பட்ட இவ்வுபனிஷத்தில் வாஸுதேவனே ஸர்வந்தர்யாமி என்று விளக்கியிருப்பதை நோக்குவோம்.

கவாமனேகவர்ணாநாம் க்ஷீரஸ்யாப்யேகவர்ணதா । க்ஷீரவத்பஷ்யதே ஜ்ஞானம் லிங்கினஸ்து கவாம் யதா ॥  த்ருʼதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வஸதி விஜ்ஞானம் । ஸததம் மனஸி மந்தயிதவ்யம் மனு மந்தானபூதேன ॥ ॥ ஜ்ஞானனேத்ரம் ஸமாதாய சோத்தரேத்வஹ்கிவத்பரம் । நிஷ்கலம் நிஶ்சலம் ஶாந்தம் தத்ப்ரஹ்மாஹமிதி ஸ்ம்ருʼதம் ॥  ஸர்வபூதாதிவாஸம் யத்பூதேஷு ச வஸத்யபி । ஸர்வானுக்ராஹகத்வேன தத்ஸ்ம்யஹம் வாஸுதேவ:

 பல நிறங்களையுடைய பசுவின் பால் ஒரே நிறத்தையுடையதாக உள்ளது. அதேபோல் ஞானிகள் பசுவின் பாலைப்போலே (பல சரீரங்களையுடையவராயினும்)  ஜீவர்கள் ஒரே அறிவமயமானவராய் காண்கின்றனர். அந்த பாலில் மறைந்துறையும் நெய்போல்  பால்போன்ற ஒவ்வொரு ஜீவனிடத்திலும் விபுஜ்ஞாநஸ்வரூபனாகையால் விஜ்ஞானமெனப்படும் பரமாத்மா மறைந்திருக்கிறான். பாலில் மத்தையிட்டு நெய்யை கடைவதுபோல மநஸ்ஸாகிறமத்தில் ஜீவாத்மாவை கடைந்து பரமபுருஷனை காணவேண்டும். நெருப்பைபோல பரமபுருஷனை ஞானக்கண் கொண்டு எழுப்பப்படவேண்டும். அவயமற்றது சலனமற்றதும் ஆசையற்றதுமான அந்த ப்ரஹ்மமே நான் என சொல்லப்படுகிறது. எல்லா பூதங்களிலும் வஸிப்பதாய் யாதொரு ஸவாக்ஷமான  தத்வமுள்ளதோ
அந்த வாஸுதேவன்  நானே.

 ஒரு புத்தகத்தின் இருப்பிடம் மேசை எனில் அந்தபுத்தகத்தை தாங்குவது மேசை எனப்பொருள்படும். அதுபோல எல்லா பூதங்களுக்கும் பரம்பொருள் இருப்பிடமாகயிருக்கிறது என்றதால் பரம்பொருள் எல்லாவற்றையும் தாங்குகிறது என்றதாகி,  ஸர்வவ்யாபகத்வம் சொல்லபடுகிறது. ஸர்வபூதங்களிலும் பரவஸ்து வாழ்கின்றது. மிகவுயர்ந்த பரம்பொருள் மிகதாழ்ந்தவஸ்துக்களிலே வெறுப்படையாமல் வியாபித்திருப்பது அவ்வஸ்துகளுக்கு கிருபைவடிவனதாலேயாகும். இப்படி எல்லா பூதங்களையும் ரக்ஷித்து காக்கிற ப்ரஹ்மம் வாஸுதேவனான ஸ்ரீ ஹரி மாத்திரமே என நிர்ணயிக்கப்படுகிறது.

புருஷஸூக்தத்தில் ஸர்வரக்ஷக நிர்ணயம் 


     அந்தர்மியாய் நின்று அளிப்பவன் அச்சுதனே என்று அருமறைகள் முடிவுகட்டியதை அறிந்தோம். அறம், பொருள், இன்பம், வீடு எனும் தர்மார்தககாமோஷங்களை அவணியிலுள்ளோர்க்கு அருள்பவனும் அநந்தனே என்பதை அருமறைகள் நிர்ணயித்திருப்பதையும் விரும்பும் பலனை கொடுத்தருளுபவனும் நாராயணனே என்பதை வேதாந்தங்களின் தலைசிறந்த பகுதியான புருஷ ஸூக்தத்தில் காண்போம்.

    புருஷஸூக்தத்தின் முதல் மந்திரமே ரக்ஷத்தினளவல்ல ரக்ஷனின் பராமரிப்பு என பிரகடனப்படுத்துகிறது. "ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்" பரம புருஷன் முடிகளாயிம், கண்களாயாரம், கால்களாயிரம், அடியாருக்கு அளிப்பதற்கு தகுந்த அளவற்ற ஞானஸக்தி களை உடையவன்.

   புருஷஸூக்தத்தின் இரண்டாவது மந்திரம் இவ்வுலகத்தாருக்கு பார்க்கும் அநந்தத்தையும் அவ்வுலகத்திற்கு செல்வாருக்கு மோக்ஷத்தை கொடுப்பதும் பரமபுருஷனே என்கிறது. ஸகலபலப்ரதன் விஷ்ணுவே என்றபடி (புருஷ ஏவேதம் ஸர்வம்
யத் பூதம் யச் ச பவ்யம்
உதாம்ருதத்வஸ்யேஷானோ
யத் அன்னேனாதிரோஹதி) அவனளிக்கும் அநந்தத்தினால் மறையாமலிருப்பதும் சென்றதும், உள்ளதும், வருவதுமான முக்காலத்திலுள்ள மூவுலகுக்கும் பரமபுருஷன் அச்சுதனே.

 மூன்றாவது மந்திரத்திலே இவ்வுலக இன்பத்தையும் அவ்வுலக பேரின்பத்தையும் அநுபவிக்கும் இடமாக உடைவனும் இவனே என்கிறது.(பாதோஸ்ய விஸ்வா பூதாநி)இவ்வுலகெல்லாம் அவன் செல்வத்தில் ஒரு பகுதி. அதில் மூன்றில் ஒரு பகுதி பரமபதத்திலும் ரக்ஷதானங்களையுடையவன் இவனே என்பதை அறுதியிட்டிருக்கிறது.

  நாலாவது மந்திரத்தில் பரமபதத்தில் நித்தியஸூரிகளுக்கும் நிர்வாஹனாயிருக்குமிருப்பையும் மதியாது தன் ரக்ஷனம் நிரம்பபெறுவதற்காக இவ்வுலகிலே உயிரளிப்பான் என்நின்றயோனியுமாய் பிறந்து பரந்தான் என்கிறது. (த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ) (ஊர்த்வ புருஷ) ஊர்த்வலோகமான பரமபதத்தில் நிற்கும் பரமபுருஷன். ரக்ஷனத்தாலே ஊற்றத்தாலே உயரநிற்பவன் தன்னை தாழவிட்டான் என்கிறது.(த்ரிபாத் உதைத்)
ப்ரத்யும்னன், ஸங்கர்ஷனன், அநிருத்னன் எனும் மூன்று அவதாரங்களை உடையவனாகி இவ்வுலையெல்லாம் ரக்ஷிக்க கடவேன் என ஸங்கல்பித்தான்.(பதோஸ்யேஹாபாவத் புந)இவருடைய அவதாரமான அநிருத்தன் இங்கு மறுபடியும் அவதரித்தான். இப்படி அவதரித்தது ஒன்று இரண்டு அவதாரமோயெனில் (ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாஸந நஸநே அபி) அதற்கு பின் உணவருந்தும் தேவமநுஷ்யாந்திகளுக்காகவும் உணவருந்தாத கல்லாகவும், கட்டியாகவுமிருக்கும் சேதனருக்காகவும் என்நின்றயோனியுமாய் பிறந்து பரந்தான் என்க.

 ஆக இப்படி உபக்ரமத்தில்(ஆரம்பத்தில்) அந்தர்மியாய் நின்று அவரவர் விரும்பும் பலன்களை தந்து அவதாரங்கள் செய்து ரக்ஷிப்பவன் புருஷோத்தமனே என நிர்ணயித்தது. உபஸம்ஹாரத்திலும் (முடிவிலும்) இவ்வர்தங்களையே வலியுறுத்துகிறது. "பரஜாபதிஸ் சரதி கர்ப்பே அந்த"என அந்தர்மியாய் நின்று நோக்குபவனும் நாராயணனே என நவின்றது. " அஜாயமாநோ பஹூதா விஜயாதே" என்றதன் மூலம் பிறப்பற்றவனாய் இருந்தபோதும் பலபடியாய் பிறக்கிறான் பரமபுருஷன் நாராயணே என அறைந்தது. ஆகவே புருஷஸூக்தம் நாராயணரே ஸர்வரக்ஷகனும் ஸகலபலப்ரதன் என்பதை நிர்ணயித்தாகியது


சதுர்வேதங்களில் பரமபதநிலய நிர்ணயம்


முக்தி பலப்ரததானத்திலே பகவானுக்கு விஷேஷமான அபிமானமுண்டு. முக்தியளிப்பது முகுந்தன் ஒருவனுக்கேயுள்ளதொரு தனிப்பெருமை. 'மு' எழுத்து முக்தியைும் 'கு' எனும் பூமியை குறிக்குமாகையால் முகுந்தன் என்பது முக்திபூமிப்ப்ரதன் (முக்தி பூமியை அளிப்பவன்) என்று பொருள்படுகிறது. அம்முக்திக்கு பரமவ்யோம பரமாகாகாதிஸப்தங்களாலே சாஸ்தரபிரதிஸித்தமான அப்பரமபதத்திற்கு நிர்வாஹனாய் இருந்துகொண்டு அடியார்க்கு அதையளிப்பவனும் விஷ்ணுவே என்பதை வேதம் நிர்ணயித்துள்ளது.

      "தத் விஷ்ணோ:பரமம் பதம் ஸதா    பஸ்யந்தி ஸூரய|| திவீவ சக்ஷதராததம்|தத் விப்ராஸோ விபந்யாவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே|விஷ்ணோர் யத் பரமம் பதம்|

  விஷ்ணுவுடைய அந்த பரமபதத்தை நித்தியஸூரிகள் எப்போதும் காண்கின்றனர். அப்பரமபதம் எங்கும் (ஒளியால்) வியாபித்திருக்கும் உலகத்துக்கெல்லாம் கண்ணாயிருப்பவனும் சூரியன் போல பிரகாசிக்கும். விஷ்ணுவுடைய யாதொரு பரமபதமிருக்கிறதோ அதில் மேதாவிகளும் துதிப்பதையே தொழிலாக கொண்டவர்களுமான நித்யஸூரிகள் விழிப்புடன் விளங்குகிறார்.
     
     என்பது ரிக், யஜூர், சாமவேதம் மூன்றிலுமே துதிக்கப்படுமொரு மந்திரம். இதில் அப்ராக்ருதமானதொரு விஷேஷம் உண்டு. அதாவது இவ்வுலகில் உள்ள யாவிற்கும் சூரியனே பிராகாசத்தை தருவதாகவும் இருப்பதால் உவமானமாக சொல்லப்படுகிறது. உண்மையில் கோடிஸூரிய பிரகாசத்தையும் விஞ்சி நிற்பதாகவே சாஸ்திரம் கோஷிக்கின்றது.
 
    " அத்யார்காநலதீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந|
ஸ்வையவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேஷம் தேவதானவை||"

       அரசனே! மஹாத்மாவான விஷ்ணுவுடைய அந்த ஸ்தானம் ஸூர்யன், அக்னி முதலானவற்றின் ஒளியையும் விஞ்சி நிற்பது. தன் ஒளியாலே தேவர்களாலும், அசுரர்களாகவும் காணமுடியாததாய் விளங்குகின்றது அது.

  என்று மஹாபாரதத்தில் வியாசரும் விளக்கயருளினார். இவ்வாக்கியங்களில்
பரமாத்மா  விஷ்ணுவேயென்பதும் அவன் மேலானதொரு உலகத்தில் எழுந்தருளியிருக்கின்றார் என்பதும் அவ்வுலகம் மிகபிரகாசமானதெனவும்,அங்கு நித்யஸூரிகள் பலர் உள்ளனரெனவும்
அவனை பல்லாண்டுகாலம் தொழுகின்றனரெனவும் தெளிவாகின்றது.

    "ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ்களம்"(முண்டகோபனிஷத்2.2.10)

    பொன்மயமான மேலான உலகத்தில் ரஜோகுணமற்றதும் அவயவங்களில்லாதுமான பரஹ்பிரம்மம் உள்ளது.

      " யோ அஸ்யாத் யக்ஷ: பரமே வ்யோமந் ஸோ அங்க வேத யதிவா ந வேத (தைத்ரிய அஷ்டகம்-2-8-9-6)

     எவனொருவன் இவ்வுலகத்திற்கு அதிபதியாக எழுந்தருளியுள்ளானோ,

 "தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா"

   யாதொரு பரம பதத்தில் ஸாத்யர்கள் எனப்படுமஎ தேவர்கள் இருக்கின்றார்களோ,  அந்த பரமபதத்தை
அவர்கள் மஹிமையுடையவர்களாக  அடைகின்றனர்.

    "பரமே வ்யோமந் ஸோஸ்நுதே ஸர்வாந்
காமாந் லஹே ப்ரஹ்மணோ "(தைத்ரிய ஆரண்யம்1-2)

   முக்தன் பரமாகாசத்தில் ப்ரஹ்மத்துடன்
கூடிய எல்லா கல்யாணகுணங்களையும்
அனுபவிக்கின்றனர்.

   "நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந்
(தைத்ரீய நாராயணீயம் 1)

   பெரியதிலும் பெரியவன் பரமபதத்தில் மேலுள்ளான்.

   என்று பல வேதவாக்யங்கள் பரமபதம் விஷ்ணுவுடையதே என நிலைநாட்டிதருகின்றன.  யஜூர்வேதத்தை சேர்ந்த கடோபனிஷத்(1-3-9)

     "ஸோத் வந:பாரமாப்நோதி தத் விஷ்ணோ:பரமம் பதம்

      சம்ஹார வழிக்கு மேலான விஷ்ணுவின் பரமபதத்தை அவன் அடைகிறான்

    எனவும் அதர்வணவேதசிரஸ்வாக்கியம்

     "ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக: । வைகுண்டபுவனலோகம் கமிஷ்யதி ।

      அஷ்டாக்ஷரத்தை உபாஸிப்பவன் வைகுண்ட லோகத்தை அடைகிறான்

   எனவும் உத்கோஷிக்கின்றது. இவ்வர்தமே நான்மறைகள் கண்ட நன்முடிவு என்று நிலைநாட்டபட்டதாயிற்று.


     








Comments

  1. "பிரம்ம விஷ்ணு ருத்ராதீதம் சிவம் "என்று பஸ்ம ஜாபாலம் கூறுவதால் சங்கரே பரமென்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்